search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக பொதுக்கூட்டம்"

    • தாய்மார்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் உட்பட மகளிர் சம்பந்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறுத்தி வருகிறார்கள்.
    • வரும் பாராளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடியார் வேட்பாளராக யாரை கை காண்பிக்கிறாரோ அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    அம்பத்தூர்:

    திருவள்ளூர் தெற்கு மாவட்டம் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. 52- ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் அம்பத்தூர் தெற்கு பகுதி செயலாளர் சி.வி. மணி தலைமையில் மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் முன்னிலையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் அமைப்பு செயலாளருமான கோகுல இந்திரா கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசியதாவது:- தி.மு.க. சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடத்துகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கிய மகளிர்க்கு தாலிக்கு தங்கம், மகப்பேறு நிதி உதவி, மகப்பேறு குழந்தை நலப் பெட்டகம், பணிக்கு செல்லும் தாய்மார்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் உட்பட மகளிர் சம்பந்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறுத்தி வருகிறார்கள். இந்த நிலைமாறி முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வழங்கிய திட்டங்கள் அனைத்தும் மீண்டும் தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடியார் வேட்பாளராக யாரை கை காண்பிக்கிறாரோ அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மருத்துவ அணி செயலாளர் ராமசாமி, மாவட்ட அவை தலைவர் திண்டு உத்தமராஜ், பொருளாளர் வி.கே.ரவி, மாவட்ட துணை செயலாளர் முகப்பேர் பாலன், பகுதி செயலாளர்கள் கே.பி.முகுந்தன், ஜெ.ஜான், தலைமை கழக பேச்சாளர் வடுகப்பட்டி சுந்தர்ராஜன் இந்திராணி, மீனா பாண்டியன், எல்.என்.சரவணன், வக்கீல் அறிவரசன், பாஸ்கர், பத்மநாபன், வழக்கறிஞர் சுருளி ராஜன், வி.பார்த்த சாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட செயலாளர்கள் எல்.கே.மீரான், என்.சேகர் ஆகியோர் நன்றி கூறினர்.

    • சங்கரன்கோவில்-வீரசிகாமணி சாலையில் 18-ம் படி கருப்பசாமி கோவில் அருகே திறந்தவெளி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • எடப்பாடி பழனிசாமியை வரவேற்க நிர்வாகிகளும், தொண்டர்களும் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழாவை தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பிரமாண்டமாக கொண்டாட வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    அதன்படி மாவட்டந்தோறும் அ.தி.மு.க. தொடக்க விழா, கட்சி நிர்வாகிகளால் பொதுக்கூட்டங்கள் நடத்தியும், நலத்திட்டங்கள் வழங்கியும், கட்சி கொடியேற்றியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

    இதன் ஒருபகுதியாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. ஆண்டு விழா பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று எழுச்சியுரை ஆற்றுகிறார்.

    இதற்காக சங்கரன்கோவில்-வீரசிகாமணி சாலையில் 18-ம் படி கருப்பசாமி கோவில் அருகே திறந்தவெளி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    விழாவையொட்டி எடப்பாடி பழனிசாமியை வரவேற்க நிர்வாகிகளும், தொண்டர்களும் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர். பொதுக்கூட்ட மேடை பகுதியில் வாழைத்தோரணங்கள், நகரின் பல இடங்களில் வரவேற்பு அலங்காரங்கள் என சங்கரன்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சங்கரன்கோவில் நகர் பகுதியில் ஏராளமான வரவேற்பு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு சுமார் ஆயிரம் பெண்கள் திரண்டு பூரண கும்ப மரியாதை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக நெல்லை வழியாக சங்கரன்கோவிலுக்கு காரில் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு தென்காசி மாவட்ட எல்லையான தேவர்குளத்தில் அ.தி.மு.க.வினர் பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து அவருக்கு சங்கரன்கோவில் நகரில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. எடப்பாடி பழனிசாமி வருகையால் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    ×